அங்கஜன் இராமநாதனால் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு முறைப்பாடு!

#SriLanka #Jaffna #Police #Complaint #srilanka freedom party #angajan
PriyaRam
2 years ago
அங்கஜன் இராமநாதனால் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு முறைப்பாடு!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சண்டிலிப்பாய் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இருந்து குறித்த கட்சியினரை வெளியேற்றுமாறு கோரி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பாடல் அலுவலகம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தினை விட்டு வெளியேறுமாறே உரிமையாளரால் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

images/content-image/2023/10/1698824638.jpg

இருப்பினும் அவர்கள் வெளியேறாத நிலையில் இன்று வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த அலுவலகம் பெரும்பாலான நேரங்களில் மூடியே இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4