இலங்கையில் உள்ள வறிய மக்களுக்கு சீனாவின் புத்த சங்கத்தால் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் உள்ள வறிய மக்களுக்கு சீனாவின் புத்த சங்கத்தால் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

இலங்கை மற்றும் சீனா பெளத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்றைய (05.11) தினம் வடமாகாணத்தில் பல பகுதிகளிற்கு விஜயம் செய்தார். 

images/content-image/1699191967.jpg

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து 50 பேருக்கு 7000 ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்துதுவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4