மழைக்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்பிற்கேற்ற வீட்டு வைத்தியம்

#Health #Home #Lanka4 #ஆரோக்கியம் #remedy #வீடு #வைத்தியர் #லங்கா4
Mugunthan Mugunthan
5 months ago
மழைக்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்பிற்கேற்ற வீட்டு வைத்தியம்

மூக்கடைப்பு மழைக்காலம் தொடங்கிவிட்டாலே ஏற்படுகிற சாதாரண பிரச்சினை தான் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் மூக்கடைப்பு பருவ காலங்களில் நாசி துவாரங்களில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களால் ஏற்படுவது. இந்த மூக்கடைப்பை முழுமையாக சரிசெய்ய வேண்டுமென்றால் அதற்கு இன்ஃபிளமேஷனகளை குறைக்க வேண்டும். வாங்க அதை எப்படி குறைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

 மூக்கடைப்பு பெரும்பாலும் பருவ காலங்களில் (மழைக்காலம், குளிர்) ஏற்படும். நம்முடைய நாசி துவாரங்களில் உள்ள சுவர் (தசைப்பகுதி) பகுதிகளில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களால் உண்டாகிறது. 

குறிப்பாக உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறையும்போது வைரஸ் உள்ளிட்ட தொற்றுக்களால் இதுபோன்ற இன்ஃபிளமேஷன்கள் உண்டாகின்றன. செடிகளில் உள்ள மகரந்தம், தூசி, பூச்சிகள், செல்லப்பிராணிகளின் முடிகளின் மூலம் வருவது. சில வகை உணவுகளால் ஏற்படும் அழற்சி என பல காரணங்களால் இந்த இன்ஃபிளமேஷன்கள் உண்டாகின்றன.

நாஸ்யா 

பெயரைக் கேட்டு பயப்படத் தேவையில்லை. நாஸ்யா மிக எளிமையான சிகிச்சை முறை தான். இதற்காக ஆயுர்வேதத்தில் சில மூலிகை எண்ணெய்களை நாசி துவாரங்களில் விட பரிந்துரை செய்யப்படுகிறது. அதற்கென ஆயுர்வேத மருந்து கடைகளில் சொட்டு மருந்துகள் கிடைக்கும். அதேபோல அலோபதி மருந்து கடைகளிலும் nasal drops கிடைக்கும். அவற்றை வாங்கி நாசி துவாரங்களில் விடுவதன் மூலம் மூக்கடைப்பையும் அதற்குக் காரணமான இன்ஃபிளமேஷன்களையும் குறைக்க முடியும். ​

நீராவி பிடித்தல்

 யூகலிப்டஸ் மற்றும் புதினா உள்ளிட்ட மூலிகை எண்ணெய்களை வெந்நீரில் கலந்து நீராவியை நாசி துவாரங்களுக்குள் நன்கு உள்ளிழுப்பதன் மூலம் மூக்கடைப்பையும் இன்ஃபிளமேஷன்களால் ஏற்பட்டிருக்கும் சளியையும் குறைக்கச் செய்யும்.

 இப்படி நீராவி பிடிப்பதன் மூலம் மூக்கடைப்பு மட்டுமில்லாமல், வெளியேறும் வியர்வையின் மூலம் உடலில் உள்ள கழிவுகளும் சேர்ந்து வெளியேறி உடலை டீடாக்ஸ் செய்யும்.

images/content-image/1699284227.jpg

 ​இஞ்சி டீ

 மூக்கடைப்பு பிரச்சினை இருக்கும்போது இஞ்சி டீ குடிப்பது நல்லது. இஞ்சி டீ குடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து மூக்கடைப்பை சரிசெய்ய உதவி செய்யும்.

 இஞ்சி டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். அதோடு இஞ்சியில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் மூக்கடைப்பையும் சைனஸ் பிரச்சினையையும் சரிசெய்யும். ​

மஞ்சள் பால்

 வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து இரவு தூங்கச் செல்லும்முன் குடித்து வர மூக்கடைப்பு சரியாகும்.

 மஞ்சள் தூளில் குர்குமின் நிறைந்துள்ளது. இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டிருக்கிறது. மூக்கடைப்பை சரிசெய்வதோடு தொண்டை வலியையும் சரிசெய்யும். ​

துளசி டீ

 துளசி டீயை குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துவதோடு சுவாச மண்டலப் பிரச்சினைகளையும் சரிசெய்யும்.

 இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து மூக்கடைப்பை சரிசெய்வதோடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ​

யூக்கலிப்டஸ் ஆயில்

 நன்கு கொதிக்க வைத்த வெந்நீரில் இரண்டு சொட்டு யூக்கலிப்டஸ் ஆயிலை விட்டு அந்த நீரை ஆவிப்பிடிக்க மூக்கடைப்பு உடனடியாக சரியாகும்.

 இது சுவாசப் பாதையைச் சரிசெய்து மூக்கடைப்பு, அதற்கு காரணமான இன்ஃபிளமேஷன்கள் ஆகியவற்றைக் குறைக்கும். ​

images/content-image/1699284288.jpg

ஆயுர்வேத மூலிகைகள்

 பருவ காலங்களில் வழக்கமாக மூக்கடைப்பு, இருமல், சளி உள்ளிட்ட இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கச் செய்யும் மூலிகைகளை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது நல்லது. குறிப்பாக, திரிகடுகு, இஞ்சி, வால்மிளகு, கருப்பு மிளகு, திப்பிலி உள்ளிட்ட மூலிகைகளை சூரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

 இவை மூக்கடைப்பை சரிசெய்வதோடு நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவி செய்யும்.

 யோகா - பிரணாயாமம்

 யோகாசனங்கள் செய்வது, பிரணாயாமம் செய்வது ஆகியவை மூக்கடைப்பை சரிசெய்யும். சுவாசப் பாதையை விரிவடையச் செய்து, சுவாசப் பாதையை சீராக்கும்.

 சுவாசப் பாதை ஆரோக்கியமாக இருப்பது, நுரையீரல் செயல்பாட்டை அதிகரிப்பது, மூச்சுத் திணறலை சரிசெய்வது, சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்வது ஆகியவற்றுக்கு உதவி செய்யும்.

 ​ஆயுர்வேத உணவுமுறை

 பருவ காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் கொண்ட உணவுகளையும மசாலா பொருள்களையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 சீரகம், கொத்தமல்லி விதை, வெந்தயம், மிளகு, மஞ்சள், பெருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் சுவாசப் பாதை தொடர்பான பிரச்சினையை சரிசெய்வதோடு மூக்கடைப்பு ஏற்படுவதையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.