அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவிற்கு தடை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவிற்கு தடை!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இந்த உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட SLC இடைக்கால குழுவின் பணிகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. 

 விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. 

 இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாது என செய்திகள் வெளியாகின. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது. இந்த சந்திப்பின் போது, ​​SLC இன் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை ஜனாதிபதியும் அமைச்சரவையும் நியமித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4