பிரான்ஸில் மீட்பு பணிக்குச் சென்ற தீயணைப்பு விரர் தாக்கப்பட்டுள்ளார்

#France #Attack #Lanka4 #தாக்குதல் #fire #லங்கா4 #Fight #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
பிரான்ஸில் மீட்பு பணிக்குச் சென்ற தீயணைப்பு விரர் தாக்கப்பட்டுள்ளார்

மீட்பு பணிக்கு வருகை தந்த தீயணைப்பு படை வீரர்கள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

 Haut-Rhin நகரில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் அங்குள்ள தீயணைப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு, தனது நண்பர் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்து, தீயணைப்பு வீரர்களை அழைத்துள்ளார்.

 சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கு, 21 வயதுடைய இளைஞன் ஒருவன், அரை மயக்கத்தில் கிடந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் முனைப்பில் தீயணைப்பு படையினர் இருக்க, இரண்டாம் நபர் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

images/content-image/1699355906.jpg

 இரு தீயணைப்பு வீரர்களுக்கும் முகத்தில் குத்தியுள்ளார். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத அவர்கள், பின்னர் சுகாதரித்து தாக்குதல் நடத்திய நபரை சமாளித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.