விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்ட மூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

#SriLanka #Parliament #wijayadasa rajapaksha
PriyaRam
2 years ago
விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்ட மூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் விரைவில் தரநிலை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

images/content-image/2023/11/1700021917.jpg

அதற்கு முன்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

கட்சித் தலைவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது குறித்த சட்டமூலத்துக்கு தேவையான திருத்தங்களை பிரதமர் மேற்கொள்வார் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4