கோப் குழு முன்னிலையில் உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஷம்மி சில்வா!

#SriLanka #Srilanka Cricket
PriyaRam
2 years ago
கோப் குழு முன்னிலையில் உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஷம்மி சில்வா!

அவுஸ்ரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருப்பது உலகக் கிண்ணப் போட்டியைக் காண குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரை அழைத்துச் சென்றதை இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

கோப் குழு முன்பாக இலங்கை கிரிக்கெட் சபை அழைக்கப்பட்டபோது கேள்விகளுக்கு பதிலளித்த ஷம்மி சில்வா, கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற போட்டியை காண குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.

images/content-image/2023/11/1700049565.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை 24, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மீண்டும் ஒருமுறை கோப் குழு முன்பு இலங்கை கிரிக்கெட் சபையை அழைக்க கோப் குழு முடிவு செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4