பேராதனை நகரில் மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேராதனை நகரில் மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

கண்டி - கொழும்பு வீதியில் பேராதனை நகரில் 04 கடைகள் மீது மண்சரிவு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (21.11) இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடையில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், பேரிடர் முகாமைத்துவ பிரிவினரும் ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடம் முன்னர் மண்சரிவு ஏற்பட்ட இடமாக இருந்ததால் கடைக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  

ஆனால், அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறாததால் விபத்து ஏற்பட்டது. மேலும் பல பாதிப்புக்குள்ளாகும் கடைகள் உள்ளதாகவும், அவற்றை உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4