அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தவே அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : பந்துல!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தவே அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : பந்துல!

அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் இன்று (22.11) காலை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக  வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன சாடியுள்ளார்.  

இது ஒரு தொழிற்சங்க நடவடிக்கை அல்ல எனவும்,  மாறாக ஒரு நாசகார நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (22.11) உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை தம்முடன் எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டினார். 

பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வது பாரிய குற்றமாகும் என்று கூறிய அவர்,  தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை தடையின்றி நடத்த உதவிய  பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளைப் பாராட்டினார்.  

விரைவுச்சாலை ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்த உடனேயே, முப்படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பை உறுதிசெய்து டிக்கெட்டுகளை வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4