புலிகளை அழித்த கையுடன் கூட்டமைப்பையும் தடை செய்திருக்கவேண்டும்! சரத் வீரசேகர

#SriLanka #Mahinda Rajapaksa #Sri Lanka President #TNA #budget
Mayoorikka
2 years ago
புலிகளை அழித்த கையுடன்  கூட்டமைப்பையும் தடை செய்திருக்கவேண்டும்! சரத் வீரசேகர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 தமிழீ​ழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்து இருக்கவேண்டும். 

மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார். மஹிந்த பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக உள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4