முதல் பெண் நீதிபதி காலமானார்!

#India #Tamil Nadu #Judge
PriyaRam
10 months ago
முதல் பெண் நீதிபதி காலமானார்!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி இன்று காலமானார்.

96 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவராவார். 

images/content-image/2023/11/1700738569.jpg

மேலும், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை கொண்ட பாத்திமா பீவி கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையில் தமிழக ஆளுநராக பதவி வகித்துள்ளார்.