கனடாவின் ஒன்றாரியோவில் வைத்தியர் ஒருவரின் தகாத நடத்தை காரணமாக கைது செய்யப்பட்டார்
#Police
#Canada
#doctor
#Lanka4
#லங்கா4
#மருத்துவர்கள்
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் நோயாளிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
13 பெண் நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது. 52 வயதான வாமிட் அடெயா என்ற மருத்துவருக்கு நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2008 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மருத்துவருக்கு எதிராக யோர்க் காவல்துறையினர் 28 குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



