சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமா?

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமா?

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27.11) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 

இதற்காக 4.5 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சீனாவின்  சினோபெக் மற்றும் விட்டோல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் விட்டோல் செயல்முறையிலிருந்து விலகியது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4