சட்ட விரோதமான முறையில் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்த குடும்பம்!

#SriLanka #Jaffna #Mannar #Tamil Nadu #TamilNadu Police
Mayoorikka
2 years ago
சட்ட விரோதமான முறையில் சென்று  தமிழகத்தில் தஞ்சமடைந்த குடும்பம்!

யாழ் - சுழிபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர். 

 தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) அதிகாலை கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் , தொடர்ந்து எம்மால் அங்கு வாழ முடியவில்லை என்பதால் , தமிழகம் வந்துள்ளோம் .

 இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4