விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் : ஹரின் பெர்னாண்டோ!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்காலத்தில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவரகத்தின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், “கிரிக்கட் பிரச்சனையை தீர்க்க நான் விடப்பட்டேன்.விளையாட்டு அமைச்சகத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையே விளையாட்டு சங்கங்களின் பிரச்சனைகள் தான்.
விளையாட்டு சட்டத்தில் மாற்றம் வேண்டும். கிரிக்கெட் மோசடிகளை தண்டிக்க வழிகள் உள்ளன. ஊழல்வாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 100 மில்லியன் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



