சென்னையில் கனமழையில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழப்பு!
#Death
#weather
#Rain
#Chennai
Mayoorikka
2 years ago
மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது.
திங்கட்கிழமை (04) முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

இந் நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.