கடல்வழியாக இலங்கைக்கு வந்த ஒரு தொகை மாத்திரைகள்! சுற்றிவளைப்பில் வெளியான தகவல்

#India #SriLanka #drugs #Medicine
Mayoorikka
2 years ago
கடல்வழியாக இலங்கைக்கு வந்த ஒரு தொகை மாத்திரைகள்! சுற்றிவளைப்பில் வெளியான தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) கடத்த முயன்ற சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

images/content-image/2023/1702444217.jpg

 இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித் ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரை களை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

images/content-image/2023/12/1702444235.jpg

 பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

images/content-image/2023/1702444267.jpg

images/content-image/2023/08/1702444253.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4