பெண் மர்ம மரணம் - பொலிஸார் தீவிர விசாரணை!

#SriLanka #Colombo #Death #Police #Investigation
PriyaRam
2 years ago
பெண் மர்ம மரணம் - பொலிஸார் தீவிர விசாரணை!

கொழும்பு, 07 விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மித்ராணி பெர்னாண்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் சடலம் அவர் வசித்த வீட்டின் மாடியில் கிடந்ததாகவும் அவரது வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இது கொலையா அல்லது சாதாரண மரணமா என்பது இன்னும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4