மல்வத்து ஓயா அருகில் வசிக்கும் மக்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மல்வத்து ஓயா அருகில் வசிக்கும் மக்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

கடும் மழையுடன் மல்வத்து ஓயாவின் இரு கரைகளிலும் உள்ள தாழ்நில மக்களுக்கு அம்பர் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தந்திரிமலை தொடக்கம் தாழ்வான பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் வெங்கலவெடிக்குளம், மடு, முசலை, நானாட்டான் ஆகிய பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், அவ்வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களும் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4