மத்திய மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபடும் அம்புலன்ஸ் சாரதிகள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மத்திய மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபடும் அம்புலன்ஸ் சாரதிகள்!

மத்திய மாகாணத்தில் உள்ள அம்புலன்ஸ் சாரதிகள் இன்றும் (19.12) நாளையும் (20.12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண அம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அச் சங்கத்தின்  தலைவர்  சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

இம்முறை, பணியிட மாறுதல் முறையில், 15 மூத்த, அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கோரிக்கையை மீறி, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை, டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்யும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு உட்பட பல பகுதிகளில் டெலிகொம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4