கைது செய்யப்படவுள்ள முன்னாள் அமைச்சர்: டிரான் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#Arrest
#government
#Minister
Mayoorikka
2 years ago
தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரைக் கைது செய்ய வேண்டுமென ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கூச்சல் போடுவதால் அது நடக்காது. இந்த விவகாரத்தில் தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.