கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை மாயம்
#SriLanka
#China
#Police
#sri lanka tamil news
#Missing
#Sea
#surfing
Prasu
2 years ago
களுத்துறை - பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியிலுள்ள கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி குறித்த நபர் காணாமல் போயுள்ளார்.
54 வயதுடைய சீனப் பிரஜையே இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன் குறித்த நபரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .