கைவிடப்பட்டது ரெலிகொம் ஊழியர்களின் போராட்டம்!

#SriLanka #Protest
PriyaRam
2 years ago
கைவிடப்பட்டது ரெலிகொம் ஊழியர்களின் போராட்டம்!

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களினால் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபையுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/12/1703331101.jpg

டெலிகொம் நிறுவனம் விற்பனை செய்யப்படுவதற்கும் தற்போதைய நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4