கொலராடோவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, மூவர் காயம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கொலராடோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள சிட்டாடல் மாலில் இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த வணிக வளாகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.