கண்ணீரால் நனைந்தது உடுத்துறை! கதறி அழுத ஆயிரக்கணக்கான மக்கள்
#SriLanka
#Death
#Lanka4
#tsunami
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து பொது நினைவிடத்திற்கு மலர் மாலை, அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலிகளும் இடம்பெற்றன. பொது ஈகை சுடரினை பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

பிரபாகரமூர்த்தி ஏற்றிவைக்க சம நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அவர்களது உறவுகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சுனாமியில் உயிர் நீத்தவர்களது உறவுகள் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.




