மாவீரர் தின ஏற்பாடு - கைது செய்யப்பட்ட மக்கள் முன்னணியின் அமைப்பாளர் மற்றும் மனைவிக்கு நீதிமன்றின் உத்தரவு!

#SriLanka #Batticaloa #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
மாவீரர் தின ஏற்பாடு - கைது செய்யப்பட்ட மக்கள் முன்னணியின் அமைப்பாளர் மற்றும் மனைவிக்கு நீதிமன்றின் உத்தரவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இது தொடர்பான விசாரணை நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

images/content-image/2023/12/1703746030.jpg

இதன்போது சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தன்று மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடுசெய்த குற்றச்சாட்டில் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4