ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், சுகந்த ஜனதா சபைக்கு இடையில் மலர்ந்த புதிய கூட்டணி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், சுகந்த ஜனதா சபைக்கு இடையில் மலர்ந்த புதிய கூட்டணி!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சுகந்த ஜனதா சபையின் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸுக்கு இடையில் புதிய அரசியல் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, சுகந்த ஜனதா சபையின் உறுப்பினர்கள் பலர்  ஐக்கிய மக்கள் சக்தியுடன், கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 ஜனவரி 20ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியை  மையமாக வைத்து ஒரு பரந்த கூட்டணி உருவாக்கப்பட உள்ளதால், அன்றைய திகதியில் இது அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலைமையால் சுதந்திர மக்கள் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4