மாத்தறை சிறைச்சாலையில் மற்றுமோர் கைதி உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே மேற்படி உயிரிழந்துளு்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பலர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.