ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் போதைப்பொருள் கடத்திய பெண் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Police #drugs #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் போதைப்பொருள் கடத்திய பெண் ஒருவர் கைது!

நோய்வாய்ப்பட்ட தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் கடத்திய பெண் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் நீதி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். 

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேகநபரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2250 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.  

பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த பெண் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகளை மோட்டார் சைக்கிளில் வைத்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்கு அடியில் 8 கையடக்கத் தொலைபேசிகளும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 150,000 ரூபாயும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, அவருக்கு போதைப்பொருள் வழங்கிய உறுகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரும் 2180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுமி விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4