பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் 1182 பேர் கைது!

#SriLanka #Arrest #Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Lanka4_srilanka_tamil
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் 1182 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நீதி காவற்துறை நடவடிக்கையின் கீழ் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

44 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்கள் இன்று (03.01)கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4