இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Rain
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04.01) ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையும் நிலவும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.