பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஒத்துழைப்பு வழங்கும் மியன்மார் அரசாங்கம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Myanmar
#Terrorists
Thamilini
2 years ago
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை பத்திரமாக மீட்க அந்நாட்டு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார இதனைக் குறிப்பிடுகிறார்.
ஜனக பிரியந்த பண்டார மற்றும் மியன்மார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.