யுத்தத்தில் இழந்த வருமானத்தை மீளப்பெறுவதே இலக்கு என்கிறார் ரணில்!
#SriLanka
#Ranil wickremesinghe
#War
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
வடக்கில் யுத்தத்தின் போது இழந்த வருமானத்தை மீளப் பெறுவதை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் வடமாகாண சர்வ மதத்தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தியில் மத நல்லிணக்கம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இந்த முயற்சியில் மதத் தலைவர்கள் ஏற்படுத்தக்கூடிய கணிசமான தாக்கத்தை பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.