சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பிறப்பித்துள்ள உத்தரவு!

#SriLanka #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news #news
Thamilini
2 years ago
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பிறப்பித்துள்ள உத்தரவு!

அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் தொடர்பான ஒழுங்குமுறைகளை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.  

அதன்படி, மேற்படி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரிய விதிமுறைகள் வெளியிடப்படும். 

இந்த ஒழுங்குமுறைகளில் எதிர்காலத்தில் அரசியலமைப்பு சபையால் நியமனங்கள் செய்யப்பட வேண்டிய திகதிகள், அளவுகோல்கள் போன்றவை இருக்க வேண்டும். 

 நிதி நிதியத்தினால் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்குவதற்காக ஜனவரி மாத இறுதிக்குள் இந்த வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த பிரேரணையை அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று சிவில் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4