இலங்கையில் பிறப்பு அத்தாட்ச்சி சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!
#SriLanka
#Digital
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
இலங்கையில் பிறப்பு அத்தாட்ச்சி சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதனால் ஊழியர்களின் ஊதியத்தை மீதப்படுத்தவும் அதேவேளையில் விரைவாக பயனடைவோர் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமெனவும் கூறப்படுகிறது.