கடமைகளை பொறுப்பேற்றனர் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்!

#SriLanka #Lanka4 #Election Commission #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
கடமைகளை பொறுப்பேற்றனர் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்!

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

images/content-image/1704882146.jpg

அதன்படி ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எம்.ஏ.பி.சி. பெரேரா, அமீர் பாயிஸ், அனுசுயா சண்முகநாதன், லக்ஷ்மன் திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4