யாழில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்! பலவகைகளில் பொங்கல் பானைகள்
#SriLanka
#Jaffna
#Festival
#Lifestyle
#Lanka4
Mayoorikka
2 years ago
எதிர்வரும் திங்கட்கிழமை (15) மலரவுள்ள உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு பொங்கல் வியாபாரிகள் அங்கலாய்க்கும் நிலையில் காணப்படுகின்றனர்.
குறிப்பாக பொங்கல் பானை உள்ளூர் உற்பத்தியிலான விற்பனையாளர்கள், பலவகை விற்பனையாளர்கள், வானவேடிக்கைகள், வெடி விற்பனையாளர்கள் அங்கலாய்க்கும் நிலைக்கு உட்பட்டுள்ளனர்.
குறிப்பாக மண்பானை ஒன்றின் விலை கடந்த 3 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் 500 ரூபாவாக இருந்தது, இப்போது 2024 ஆண்டு 800 ரூபாவாக இருக்கின்றது.
அதே போன்று ஏனைய பானைகளின் விலை 800 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனையாகின்றது.