அபாயகரமான நிலையில் கொழும்பு மாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கள்!
#SriLanka
#Colombo
#Lanka4
#Building
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்கள் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்ய அல்லது இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, கெத்தாராம பரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகஸ்யாய அபயரம் மூன்று மாடி வீடுகள் உட்பட 06 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்குகின்றன.