தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சபாநாயகர்!
#SriLanka
#Lanka4
#mahinda yappa abewardana
#speaker
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்திற்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் இன்று முதல் சட்டமாக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.