ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை விளக்க அறிக்கை மீதான விவாதம் இன்று!

#SriLanka #Parliament #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை விளக்க அறிக்கை  மீதான விவாதம் இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08.02) ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த விவாதம் இன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்போது,  அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் உள்ள முன்மொழிவுகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்பட வேண்டும். 

09வது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஆரம்பமானது, ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உரை ஆரம்பிக்கப்பட்டவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழு உட்பட பல எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் குழு சபையை விட்டு வெளியேறியது.  

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன ஒத்திவைப்பு மீதான விவாதத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் இன்று இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4