பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத்தேர்தல்!
#SriLanka
#Election
#Pakistan
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (08) நடைபெற உள்ளது.
128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07.02) தேர்தலுக்கான திகதி இருந்த வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தேர்தல் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.



