திமுக தலைமையில் நாளை மீனவர் தாக்கப்படுதல் குறித்த ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது

#India #Tamil Nadu #Protest #Attack #Fisherman
Mugunthan Mugunthan
2 months ago
திமுக தலைமையில் நாளை மீனவர் தாக்கப்படுதல் குறித்த ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை (11ம் தேதி) காலை 10.30 மணிக்கு ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் திரட்டி ஆர்ப்பாட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என திமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.