பொலிஸாருக்கு உயிர் ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள்!

#SriLanka #Police #drugs #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாருக்கு உயிர் ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள்!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தை தேடும் நீதி நடவடிக்கையை இலஞ்சம் கொடுத்து தடுத்து நிறுத்துவதற்கு கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  

இலஞ்சத்தின் தாக்கத்திற்கு மேலதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்  ஜகத் சந்திரகுமார குறிப்பிடுகின்றார்.  

இலங்கையில் இருந்து அனைத்து இலஞ்ச அச்சுறுத்தல்களும் இல்லாதொழிக்கும் வரை நீதி நடவடிக்கை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நடவடிக்கைகளினால் மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மருந்துப் பொதி ஒன்றின் விலை தற்போது ஆறாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4