இலங்கைக்கு வரும் இந்திய சுற்றலாப் பயணிகளுக்கு அறிமுகமான புதிய நடைமுறை!

#India #SriLanka #Tourist #Tourism
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றலாப் பயணிகளுக்கு அறிமுகமான புதிய நடைமுறை!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை (UPI) ஊடாக QR குறியீட்டை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன. 

 மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4