ராமேஸ்வரத்தில் கருப்புக் கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்!
#India
#SriLanka
#Fisherman
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன் பிடி விசைப்படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை நீதிமன்றமத்தின் தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி வருவதாக அறிய முடிகிறது.