யுக்திய நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது!

#SriLanka #Arrest #Police
Mayoorikka
2 years ago
யுக்திய நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன்போது, 125 கிராம் 992 மில்லி கிராம் ஹெராயின், 162 கிராம் பனி 361 மி.கி, கஞ்சா 01 கிலோ 157 கிராம், மாவா 328 கிராம் 59 மி.கி, துலே 28 கிராம், மதனா மோதக 08கிலோ 10கிராம், 55 மாத்திரைகள், 6,817 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

 மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 116 சந்தேக நபர்களில் 6 சந்தேக நபர்களும், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் 105 பேரும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான 105 திறந்த பிடியாணைகளும், 03 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4