யாழில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஆலயங்களுக்கு செல்ல அனுமதி!

#SriLanka #Sri Lanka President #Jaffna #Temple #Sri Lankan Army
Mayoorikka
2 years ago
யாழில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஆலயங்களுக்கு செல்ல அனுமதி!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து கோவில்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

 இந்த முடிவின் கீழ், கட்டுவன் முத்துமாரி அம்மன் கோவில், வசாவிளான் மணம்பிறை கோவில், வசாவிளான் சிவன் கோவில், வசாவிளான் நாக கோவில், பலாலி ராஜ ராஜேஸ்வரி கோவில், பலாலி நாக தம்பிரான் கோவில் மற்றும் பலாலி சக்திவேல் முருகன் கோவில் ஆகியவற்றில் வாராந்த பூஜை மற்றும் பிற சடங்குகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். 

 கோவில் அறங்காவலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பல கோரிக்கைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 முன்பு இந்த கோவில் வளாகத்தில் மாதாந்திர மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4