ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

#SriLanka #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இன்று (04.03) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது சீடர் ஒருவரும் பயணித்த வண்டியின் மீதே  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 வண்டியில் பயணம் செய்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,இருப்பினும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிரிபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மன்னா ரொஷானின் சகோதரரே உயிரிழந்துள்ளார். தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4