இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்த 15 இந்திய மீனவர்கள் கைது

#India #SriLanka #Arrest #Fisherman
Soruban
2 years ago
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்த 15 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இந்தியா - நாகபட்டினத்தை சேர்ந்த 15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் .

குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

 குறித்த மீனவர்களுக்கு எதிராக நீரியல்வள திணைக்களம், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4