பாதுகாப்பு கருதி பாகிஸ்தானில் பணிகளை இடைநிறுத்திய சீனா

#China #Death #Attack #Pakistan #work #suspend
Prasu
3 months ago
பாதுகாப்பு கருதி பாகிஸ்தானில் பணிகளை இடைநிறுத்திய சீனா

இந்த வாரம் ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பொறியாளர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் ஓட்டுனர் கொல்லப்பட்டதை அடுத்து, சீன ஒப்பந்ததாரர்கள் பாகிஸ்தானில் இரண்டு பெரிய அணை திட்டங்களின் கட்டுமானத்தை நிறுத்தியுள்ளனர் என்று மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 1,250 சீனப் பிரஜைகள் பணிபுரியும் தளங்களை மீண்டும் திறப்பதற்கு முன், பாகிஸ்தான் அதிகாரிகள் புதிய பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நிறுவனங்கள் கோரியுள்ளன என்று அதிகாரி கூறினார்.

சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் ஒரு முக்கிய கவலையாக உள்ளது, அணைக்கட்டு தளங்களில் ஒன்றின் அருகே மலைப்பாங்கான சாலையில் அவர்களது வாகனத்தை மோதிய தற்கொலை குண்டுதாரி ஒருவரால் தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டனர்.

 கைபர் பக்துன்க்வா உள்துறைத் துறையின் மூத்த அதிகாரி பெயர் தெரியாத நிலையில்,சைனா கெஜோபா குழுமம் மாகாணத்தில் உள்ள தாசு அணையின் பணியை நிறுத்தியுள்ளது மற்றும் பவர் சீனா இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த டயமர் பாஷா அணையின் பணியை நிறுத்தியுள்ளத என்பர் தெரிவித்தார்.